பிரார்த்தனைகள்

  பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்.

வணங்கு வதற்கு சிரசையும் வாழ்த்து வதற்கு நாவையும் சிந்தித்து செயல்படும் திறனையும் தந்த வல்ல ரஹ்மானை போற்றி ஆரம்பம் செய்கின்றேன்.

இறை இல்லம் கவ்பதுல்லாவையும் இறை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் தரிசிக்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக?

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு?
                     💓💓💓💓💓💓💓
                     பிரார்த்தனைகள்
                     💓💓💓💓💓💓💓
நோன்பு திறந்தவுடன் ஒருவர் ஓத வேண்டிய பிரார்த்தனை

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ
الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

‘தஹபல் லமஉ வப்தல்லதில் உரூக்கு வதபதில் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’
பொருள்: நரம்புகள் நனைந்து விட்டன, தாகம் தீர்ந்து விட்டது, கூலி அல்லாஹ்வின் நாட்டத்தின் படி உறுதியாகி விட்டது’ (அபூதாவுத்)

இந்த நபிமொழியும் பலவீனமானது என அறிஞர்கள் கூறுகின்றனர். எனவே, பொதுவாகவே “பிஸ்மில்லாஹ்” என்று கூறித் திறப்பதே சிறப்பாகும். இருப்பினும் மேற்கூறிய துஆவையும் ஒதுவதில் தவறில்லை.

குர்ஆன் – ஹதீஸில் இடம் பெற்றுள்ள துஆ மற்றும் திக்ர்கள் (3)

துஆ (அரபியில்) அஊது பில்லாஹி மின் ஜஹ்தில் பலாயி வதர்கிஷ் ஷகாயி வ ஸூயிலல் களாயி வஷமாததில் அஃதாயி

பொருள்: கடுமையான துன்பத்தை விட்டும் துர்ப்பாக்கியம் அடைவதை விட்டும் விதியின் தீமையை விட்டும் எதிரிகளின் எக்காளத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

துஆ (அரபியில்): அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மினல் ஹம்மி வல் ஹுஸ்னி வமினல் அஜ்ஸி வல் கஸ்லி வ மினல் ஜுப்னி வல் புخக்லி வமினல் மஃஸமி வல் மஃக்ரமி வமின் கஃலபதித் தைனி வ கஹ்ரிர் ரிஜால்

பொருள்: யா அல்லாஹ்! கவலை, இயலாமை, சோம்பல், கோழைத்தனம், கஞ்சத்தனம், பாவம், கடன் மற்றும் கடன்களின் பாரம், பிற மனிதர்களின் கொடுமைகள் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.

துஆ (அரபியில்): அஊதுபிகல்லாஹும்ம மினல் பரஸி வல் ஜுனூனி வல் ஜுஸாமி வமின் ஸய்யியில் அஸ்காம்

பொருள்: வெண்குஷ்டம்,பைத்தியம், தொழு நோய், மற்றும் பிற கொடிய நோய்கள் அனைத்தை விட்டும்-யா அல்லாஹ் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.

துஆ (அரபியில்): அல்லாஹும்மஸ்துர் அவ்ராத்தீ வ ஆமின் ரவ்ஆத்தி வஹ்ஃபள்னீ மின் பைனி யதய்ய வ மின் خகல்Fபீ வஅன் யமீனி வஅன் ஷிமாலி வமின் Fபௌக்கீ வ அஊது பி அள்மதி(க்)க மின் அன் உஃக்தால மின் தஹ்த்தீ

பொருள்: இறைவா என்னுடைய பலவீனங்களை மறைப்பாயாக. என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதி தருவாயாக. எனக்கு முன்பிருந்தும் பின்னாலிருந்தும் எனது வலது புறமிருந்தும் இடது புறமிருந்தும் எனக்கு மேலிருந்தும் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாயாக. இன்னும் கீழே இருந்து எதிர்பாராத விதமாக கொல்லப்படுவதில் இருந்து -உனது கண்ணியத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன்.

துஆ (அரபியில்): அல்லாஹும் மஃக்Fபிர் க(த்)தீஅ(த்)தீ வஜஹ்லீ வ இஸ்ராFபீ , Fபீ அம்ரீ வமா அன்த அஃலமு பிஹி மின்னீ அல்லாஹும் மஃக்கFபிர் லீ ஜத்தி வஹஸ்லீ வக(த்)தயீ வஅம்தீ வகுல்லு தாலிக இன்தீ

பொருள்: யா அல்லாஹ்! எனது பாவத்தையும் எனது அறியாமை யையும் எனது விஷயத்தில் நான் மேற்கொள்ளும் வரம்பு மீறல் களையும் மற்றும் எந்தப் பிழைகளை என்னைவிட நீ அதிகம் அறிந்துள்ளாயோ அந்தப் பிழைகளையும் மன்னிப்பாயாக. இறைவா! நான் விரும்பி நாடி செய்த பிழைகளையும் விளையாட்டாகச் செய்த தவறுகளையும் மன்னிப்பாயாக! நான் தவறுதலாக செய்தவற்றையும், வேண்டுமென செய்தவற்றையும் மன்னிப்பாயாக!

துஆ (அரபியில்): அல்லாஹும் மஃக்Fபிர் லீ மா கத்தம்(த்)து வமா அخக்கர்து வமா அஸ்ரர் (த்)து வமா அஃலன்து வமா அன்(த்)த அஃலமு பிஹி மின்னீ அன்தல் முகத்திம். வ அன்தல் முஅخக்கிர் வஅன்த அலா குல்லி ஷைஇன் கஸீர்

பொருள்: நான் முன்னர் செய்த பாவங் களையும் பின்னர் செய்த இரகசியமாய் செய்த- பகிரங்கமாய்ச் செய்த பாவங்களையும் மேலும் எந்தப் பிழைகளை என்னை விட நீ அதிகம் அறிந்துள்ளாயோ அந்தப் பிழைகளையும் மன்னிப்பாயாக! முன்னதாக அல்லது தாமதமாக ஏற்பட்ட அனைத்துப் பொருள்களையும் உருவாக்கியவன் நீயே! மேலும் நீ அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவனாய்த் திகழ்கின்றாய்!

குர்ஆன் – ஹதீஸில் இடம் பெற்றுள்ள துஆ மற்றும் திக்ர்கள் (2)

துஆ: ரப்பனா லா துஸிஃக் குலூபனா பஃத இத் ஹதை(த்)தனா வ ஹப்லனா மி(ன்ல்)லதுன்(க்)க ரஹ்மதன், இன்னக அன்தல் வஹ்ஹாப்

பொருள்: எங்கள் இரட்சகனே! எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பிறகு எங்களை வழிபிறழச் செய்து விடாதே! மேலும் உன்னருளில் இருந்து எங்களுக்கு கொடை வழங்குவாயாக! நிச்சயமாக நீயே உண்மையில் தாராளமாக வழங்குபவனாக இருக்கிறாய்!

துஆ: ரப்பி ஹப்லீ மின்(ல்)லதுன்(க்)க துர்ரிய்யதன் தய்யிபதன் இன்னக ஸமீஉத் துஆ

பொருள்: என் இரட்சகனே! உன்னிடம் இருந்து எனக்கு தூய்மையான சந்ததிகளை வழங்குவாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவியேற்பவனாக இருக்கிறாய்!

துஆ(அரபியில்): ரப்பனா ழலம்னா அன்Fபுஸனா வ இன் (ல்) லம் தஃக்Fபிர் லனா வ தர்ஹம்னா ல நகூனன்ன மினல் காஸிரீன்

பொருள்: எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நாங்களே அக்கிரமம் இழைத்துக் கொண்டோம். எங்களை நீ மன்னித்து எங்களுக்குக் கிருபை செய்யாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டத்திற்குரியவர்களாகி விடுவோம்!

துஆ (அரபியில்): ரப்பனஸ்ரிFப் அன்னா அதாப ஜஹன்னம இன்ன அதாபஹா கான ஃகராமா

பொருள்: எங்கள் இரட்சகனே! எங்களை விட்டும் நரக வேதனையை அகற்றிடு. நிச்சயமாக அதன் வேதனை ஓயாது தொல்லை தரக் கூடியது!

துஆ(அரபியில்): ரப்பனா ஹப்லனா மின் அஸ்வாஜினா வ துர்ரிய்யாத்தினா குர்ரத்த அஃயுனி(வ்) வஜ் அல்னா லில் முத்தகீன இமாமா

பொருள்: எங்கள் இரட்சகனே! எங்கள் மனைவியரையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக! மேலும் எங்களை பயபக்தியாளர்களுக்கு முன்னோடிகளாக ஆக்குவாயாக!

துஆ (அரபியில்): அல்லாஹும்ம அஸ்லிஹ்லீ தீனியல்லதி ஹுவ இஸ்மது அம்ரி வ அஸ்லிஹ்லீ துன்யாயல்லத்தீ Fபீஹா மஆதீ வ அஸ்லிஹ் ஆகிரதியல்லத்தீ Fபீஹா மஆதீ வஜ்அலில் ஹயாத்த ஸியாதத(ன்ல்) லீ Fபீ குல்லி கைரின் வல் மௌத்த ராஹத(ன்ல்) லீ மின் குல்லி ஷர்

பொருள்: எனக்கு பாதுகாப்பாய் இருக்கும் என்னுடைய தீனை எனக்கு சீர்படுத்துவாயாக! எனது வாழ்வு எதில் இருக்கிறதோ அத்தகைய எனது உலகத்தை எனக்குச் சீர்படுத்துவாயாக! எங்கு நான் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளதோ அந்த எனது மறுமையை எனக்கு சீர்படுத்துவாயாக! ஒவ் வொரு நன்மையையும் செய்வதற்கு (எனக்கு சாத்தியமாகும் வகையில்) என் வாழ்நாளை அதிகமாக்குவாயாக! மேலும் ஒவ்வொரு தீங்கிலிருந்தும் அமைதி அளிக்கக் கூடியதாக மரணத்தை ஆக்குவாயாக!

குர்ஆன் – ஹதீஸில் இடம் பெற்றுள்ள துஆ மற்றும் திக்ர்கள் (1)

திக்ர் (அரபியில்): ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வ லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்

பொருள்: அல்லாஹ் தூய்மையானவன். மேலும் அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இறைவன் இல்லை. மேலும் அல்லாஹ் மாபெரியவன்.

துஆ (அரபியில்): ஸுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி ஸுப்ஹானல்லாஹில் அழீம்

பொருள்: அல்லாஹ்வைப் புகழ்வதோடு அவனைத் துதிக்கவும் செய்கிறேன். மகத்துவம் மிக்க அல்லாஹ் தூய்மையானவன்.

திக்ர் (அரபியில்): லா இலாஹ இல்லல்லாஹு வலா நஅஃபுது இல்லா இய்யாஹ். லஹுன் நிஅஃமது வலஹுல் Fபழ்லு வலஹுஸ் ஸனாவுல் ஹஸன், லா இலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ் கரிஹல் காஃபிரூன்

பொருள்: அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவன் ஒருவனையே நாங்கள் வணங்குகிறோம். அருட்கொடைகள் தந்தவன் அவனே. கிருபையும் அவனுக்குரியதே. மேலும் அழகிய தொடர் புகழும் அவனுக்கே! அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இறைவன் இல்லை. அவன் ஒருவனுக்கு மட்டுமே கீழ்ப்படிந்தவர்களாய் அவனை நாங்கள் வணங்குகிறோம்.

திக்ர் (அரபியில்): லா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வைக் கொண்டே தவிர எந்த ஆற்றலும் அதிகாரமும் இல்லை.

துஆ (அரபியில்) : ரப்பனா தகப்பல் மின்னா இன்ன(க்)க அன்(த்)தஸ் ஸமீஉல் அலீம் வ து(த்)ப் அலைனா இன்னக அன்தத் தவ்வாபுர் ரஹீம்

பொருள்: எங்கள் இரட்சகனே! எங்களிடம் இருந்து (இந்தப் பிரார்த்தனைகளை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீதான் எல்லாவற்றையும் செவியுறுபவனாகவும் நன்கு அறிபவனாகவும் இருக்கிறாய். மேலும் எங்கள் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ தான் பெரிதும் மன்னிப்பவனும் கருணை மிக்கவனும் ஆவாய்!

தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ‘அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கல்க்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூ உ லக்க பி நிஃமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த’ என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும்.

பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்றவரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக் கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.)

اَللّهُمَّ أَنْتَ رَبِّي ، لاَ إِلهَ إِلاَّ أَنْتَ ، خَلَقْتَنِي ، وَأَنَا عَبْدُكَ ، وَأَنَا عَلىَ عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ ، أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ ، وَأَبُوْءُ بِذَنْبِيْ ، فَاغْفِرْ لِيْ ، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ .

இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார் என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார்.

புகாரி: ஹதீஸ் எண்: 6306

‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112 வது) அத்தியாயத்தின் சிறப்பு.

அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவிக்கிறார்கள். ” ஒருவர் ‘குல்ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112 வது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக்கொண்டிருந்ததை மற்றொரு மனிதர் செவிமடுத்தார். (இதைக்கேட்ட) அந்த மனிதர் விடிந்ததும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார். அந்தச் சிறிய அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப அவர் ஓதியதை) இவர் சாதாரணமாக மதிப்பிட்டதைப் போல் தெரிந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயமும் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு ஈடானதாகும்” என்று கூறினார்கள்.

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, ‘ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா?’ என்று கேட்டார்கள். அதனைச் சிரமமாகக் கருதிய நபித்தோழர்கள், ‘எங்களில் யாருக்கு இந்தச் சக்தி உண்டு, இறைத்தூதர் அவர்களே!” என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் ஒருவனே. அல்லாஹ் தேவையற்றவன்’ (என்று தொடங்கும் 112 வது அத்தியாயம்) குர்ஆனின் மூன்றிலொரு பகுதியாகும்’ என்று கூறினார்கள்.

ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள் . நபி(ஸல்) அவர்கள் தங்களின் படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து, அதில் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’, ‘குல் அஊது பிரப்பில் ஃபலக்’, ‘ குல் அஊது பிரப்பின்னாஸ்’ ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக்கொள்வார்கள். பிறகு தம் இரண்டு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தம் உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.

இரவுத் தொழுகை, உறக்கம், ஓதுதல், குர்ஆன், தூக்கம், படுக்கை, மதிப்பு

அல்லாஹ்வின் பிரியம்! எளிதான சொல்! நன்மை தீமை நிறுக்கப்படும் தராசில் கனமானது!
‘(இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை. நாவுக்கு எளிதானவை. நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும்.

(அவை:) 1. சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்). 2. சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்)’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஆதாரம்: முக்தஸர் ஸஹீஹுல் புஹாரி

தராசு, திக்ர், தீமை, துதித்தல், நன்மைகள், பிரியம்

அல்பகரா அத்தியாயத்தின் இறுதி இரு வசனங்களின் மகிமை!
‘அல்பகரா’ அத்தியாயத்தின் இறுதி இரண்டு (திருக்குர்ஆன் 02:285 – 286) வசனங்களை இரவு நேரத்தில் ஓதுகிறவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக அவை ஆகிவிடும் என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை பத்ருப்போரில் பங்கெடுத்தவரான அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ஆதாரம்: முக்தஸர் ஸஹீஹுல் புஹாரி.

آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللّهِ وَمَلآئِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لاَ نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ وَقَالُواْ سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

(இறை) தூதர். தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம் (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம். எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம். (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள். (Sura Al-Baqarah: 2:285)

لاَ يُكَلِّفُ اللّهُ نَفْسًا إِلاَّ وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَآ أَنتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்;) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக!

எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” (Sura Al-Baqarah: 2:286)

அல்பகரா, சுமை, தீங்குகள், பத்ருப்போர், மன்னிப்பு, வெற்றி
ஆயத்துல் குர்ஸிய்யின் சிறப்பு!

கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் யார் ஆயத்துல் குர்ஸிய்யை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு அவரின் மரணம்தான் தடையாக உள்ளது. (நபிமொழி, அறிவிப்பவர் : அபூ உமாமா -ரலி, நூல் : நஸயீ)

اللّهُ لاَ إِلَـهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَلاَ يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

அல்லாஹ்- அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன், அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை – அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். (அல்குர்ஆன்: 2:255)

இன்ஷா அல்லாஹ் தொடரும்!

அனைவரும் படிக்க வேண்டும் மற்றவர்களுக்கு எத்தி வைக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்!

ஸல்லல்லாஹூ அலா முகம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ஸல்லல்லாஹூ அலா முகம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ஸல்லல்லாஹூ அலா முகம்மது யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ

அல்ஹம்துலில்லாஹ்

Comments

Popular posts from this blog

சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள்: ஆபத்தை தவிர்க்க தெரிந்து கொள்ளுங்க!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

சிந்திக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்